Header Ads



திருடினால் நல்லது என, மனதில் எண்ணம் உதயமாகின்றது - ரஞ்சன்

திருடினால் நல்லது என தனது மனதில் எண்ணம் உதயமாகின்றது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சமூர்த்தி பெறுவோருக்கு கூடுதல் சேவையை வழங்கவும், வறியவர்கள் என்ற போர்வையில் போலியாக இந்த திட்டத்தில் நலன் பெற்றுக் கொண்டவர்கள் குறித்து விசாரணை செய்யவும் முடியும் என கருதுகின்றேன்.

களவு, மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகம் கிடைக்கின்றது. அவ்வாறனவர்களுக்கே அதிகம் கிடைக்கப் பெறுகின்றது. இதுதான் அடிப்படைத் தகுதி போல் தோன்றுகின்றது.

கடந்த அரசாங்கத்துடன் ஒப்பீடு செய்யும் போது எமது அரசாங்கம் நல்ல விடயங்களை செய்கின்றது. 30 வீதமான திருடர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Better you become our Sri Lanka PRESIDENT. Sure we can get rid of some Thieves.

    ReplyDelete

Powered by Blogger.