சஜித் பதவிவிலக வேண்டும் - ரவி
ஐ.தே.க பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் ஆரம்ப முதலே ஒத்துவராது. அமைச்சு பதவி இல்லாத நிலையில் சஜித் பிரேமதாசவை ரவி வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் அநுராதபுரத்தில் உள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடம் வீடு கட்டுவதற்காக நாசமாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்சினையை காரணம் காட்டி அமைச்சர் சஜித் பதவி விலக வேண்டும் என ரவி கருணாநாயக்க கூறி வருகிறார்.
புராதன இட அழிவுக்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என வெ ளிப்படையாக கூறிவரும் அவர் இதற்கு கட்சிக்குள்ளும் சிலரின் ஆதரவை பெற முயன்று வருவதாக அறிய வருகிறது.
அவரை அமைச்சு பதவியில் இருந்து துரத்த முயற்சி செய்து வரும் நிலையில் மறுபக்கம் அதிகாரிகள் செய்த தவறுக்கு தன் மீது வீண்பழி சுமத்த முயல்வதாக அமைச்சர் சஜித் கூறி வருகிறாராம்.
Why this Thief Ravi Shouting. We should not allowed these kind of culprit to enter parliament... or else again he will come to power.
ReplyDeleteParliament of Thief's.