Header Ads



ஐ.தே.க.யின் இன்றைய மத்திய கூட்டத்தில் என்ன நடந்தது..?

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இதுவாகும்.

விஜயவர்தன குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீரமைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் அடிமட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, பிரதமர் ரணிவிக்ரமசிங்க, கட்சியின் பொதுசெயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.