மாலைதீவினர் அதிகளவில், வசிக்கும் பகுதியாக கொழும்பு
கொழும்பு நகரம் மாலைதீவு பிரஜைகள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவை சந்தித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நஷீட் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகள் பற்றியும் கலந்துரையாடியதாக மொஹமட் நஷீட் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment