Header Ads



என்னைப் பற்றி மகிந்தவே, இறுதித் தீர்மானம் மேற்கொள்வார் - கோட்டாபய

நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொடகவல பகுதியில் இன்று (12) நடைபெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கைது செய்வதன் ஊடாக தனது பயணத்தை நிறுத்திவிட யாருக்கும் முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.