இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வு
இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் இடம்பெறும் இராணுவ நினைவு தின நிகழ்வுகள் இந்த ஆண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளன.
தேசிய இராணுவ நினைவு தின பிரதான நிகழ்வு, நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூரும் பொருட்டு இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஒளி பூஜை'நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நாளை பிற்பகல் 6.00 மணிக்கு களனி ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளது.
Post a Comment