Header Ads



அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மிக விரைவில் கொடுப்பனவு இம்ரான்எம்.பி

கடந்த அரசின் காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள், பதவியுயர்வுகள் மிக விரைவில் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை இன்று -08- காலை பத்தரமுல்லையில் உள்ள அவரது அலுவகத்தில் சந்தித்து உரையாற்றிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த அரசின் காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பலர் சட்டத்துக்கு முரணாக அரசியல் காரணங்களுக்காக அலுவலக ரீதியில் பழிவாங்கப்பட்டனர். இவ்வாறு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு பதவி உயர்வு வழங்க எமது அரசு தீர்மானித்து தகுதியானவர்களுக்கு இந்த சலுகைகளை வழங்க நேர்முக தேர்வையும் நடாத்தி இருந்தது.

எனினும் ஒரு சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அந்த சலுகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இவ்வாறு நேர்முக தேர்வை முடித்த ஆசிரியர்களின் சலுகைகளை விரைவில் வழங்குமாறு கூறி கல்வி அமைச்சரும் எமது கட்சியின் செயலாளருமான அகில்விராஜ் காரியவசத்தை ஆசிரியர் சங்கத்துடன் சந்தித்து கலந்துரையாடினேன்.

இந்த கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் மிக விரைவில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் கொடுப்பனவுகளையும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.