Header Ads



சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'வர்த்தகர் ஒன்றுகூடல்'

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில்' வர்த்தகர் ஒன்றுகூடல்' நிகழ்வு நாளை (07) திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும் முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு ஜனாப் ஹில்மி சுலைமான்  பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இஸ்லாமிய வியாபாரம், அதன் நுணுக்கங்கள், வியாபார முகாமைத்துவம், வியாபாரத்தில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, வாடிக்கையாளர்களை கவர்தல், தரமான தயாரிப்புக்களை வழங்கல், திருப்திப்படுத்தல் என்பன பற்றி உரை நிகழ்த்தவுள்ளார்.

'வர்த்தகர் ஒன்றுகூடல்' நிகழ்வுக்கு அனைத்து வர்த்தகர்களும் கலந்து கொள்ளுமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக், செயலாளர் எம்.எப்.ஏ.பாஸித் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.