Header Ads



செயற்கை பற்தொகுதி, தொண்டையில் சிக்கி ஒருவர் மரணம்

-Hafeez-

போலிப் பற்தொகுதி குரல்வளையில் சிக்கியதால் ஒருவர் மரணித்துள்ளார்.

போலிப் பற்தொகுதி குரல்வளையில் சிக்கியதால் சிகிட்சைக்காக தம்புல்லை வைத்திய சாலைiயில் அனுமதிககப்பட்ட 60 வயது நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

மரணித்தவர் தம்புல்ல திகம்பதாவ  சியம்பலாவௌ என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவராகும்.

கடந்த 19ம் திகதி ஹபரன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் தம்புல்லை வைத்திய சாலைக்குமாற்றப்பட்ட போது அங்கு சிகிற்சை பலனின்றி மரணித்துள்ளார். 

21ம் திகதி தம்புல்லையில் இடம் பெற்ற பிரேத பரிசோதனையின் போதே செயற்கள் பற் தொகுதி வெளிஎடுக்கப்பட்டுள்ளது. செயற்கை பற்தொகுதி குரல்வளையில் சிக்கியதால் ஏற்பட்ட மரணமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.