Header Ads



நாளைக்கு ரமழான், தலைப்பிறையை பாருங்கள்


புனித ரமழான் மாதத் தலைப்­பிறை தீர்­மா­னிக்கும் மாநாடு நாளை புதன்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ளது. 

மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன், ஹனபி பள்­ளி­வாசல் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இம்­மா­நாட்டில் தலைப்­பிறை பற்றி எடுக்­கப்­படும் ஏக­ம­ன­தான தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டா­கவும் ஏனைய ஊட­கங்கள் மூல­மா­கவும் மாநாட்டு தலை­வ­ரினால் நாட்டு மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக உத்­தி­யோ­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும். 

தலைப்­பிறை சம்­பந்­த­மான ஊர்­ஜி­த­மற்ற தக­வல்­க­ளையோ வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்கப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.