Header Ads



இஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக்கூடிய, மார்க்கம் என்பதை ரமழான் நிரூபிக்கின்றது - ஹக்கீம்

ரமழான் மாதம் என்கின்றபோது எங்களை பண்படுத்திக் கொள்வதற்கும், எங்களுக்கு மத்தியிலிருக்கிருக்கிற நற்பண்புகளை சீர்படுத்திக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும். குறிப்பாக மற்ற சமூகங்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகின்ற முக்கியமான குணவியல்புகளை வளர்த்துக் கொள்வதற்கான நல்ல படிப்பினைகளையும் இந்த ரமழான் மாதம் எங்களுக்கு தருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு  ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,  

இஸ்லாம், ஈகைப் பண்பு எனும் எங்களுடைய செல்வத்திலிருந்து அளவிட்டு ஏழை மக்களுக்கு கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கிற ஒரு மார்க்கம் மாத்திரமல்ல, முஸ்லிம்கள் தாராளமாக கொடுத்து வாழுகிற ஒரு சமூகம் என்பதை நிரூபிக்கின்ற ஒரு மார்க்கமாகவும் எங்களுடைய இஸ்லாம் மார்க்கம் இருக்கிறது. இந்த புனித ரமழான் மாதம் நல்ல படிப்பினைகளை உள்ளடக்கிய மாதமாக இருப்பது மாத்திரமல்ல, எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக ஏனைய பல விதமான முரண்பாடுகள் கருத்துவேறுபாடுகள் இருக்கிற நிலையிலும், உச்ச கட்ட சகிப்புத் தன்மையை பேணுவதற்கான பயிற்சியை வழங்குகிற ஒரு மாதமாகவும், எல்லோரும் எதிர்பார்க்கின்றவாறு உச்ச கட்டகமாக ஆன்மீக பண்புகளை வளர்த்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருக்கின்ற ஒரு நிலைமையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம் என்றார். 

2 comments:

  1. சத்தியமாகவா?

    ReplyDelete
  2. கட்சியில உங்கட பதவிய மட்டும் யாாருக்கும் கொடுத்திராதீங்க. அது அல்லாஹ் நீங்க பிறக்கும் போதே சேர்த்து கொடுத்ததில்லையா.

    ReplyDelete

Powered by Blogger.