இறையில்லங்களை பதிவு செய்யுங்கள் - அப்படிச் செய்யாமையால் ஏற்பட்ட பாதிப்பு
இதுவரை காலம் வக்பு சபையில் பதிவுசெய்து கொள்ளப்படாதுள்ள பள்ளிவாசல்களைத் தாமதமின்றி பதிவுசெய்து கொள்ளும்படி வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கண்டி வன்செயல்களின்போது பாதிக்கப்பட்டுள்ள இதுவரை காலம் பதிவுகளை மேற்கொண்டிராத பள்ளிவாசல்களின் பதிவுகள் தொடர்பில் வக்பு சபை விஷேட கவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, வன்செயல்களின்போது பாதிக்கப்பட்ட, எரிக்கப்பட்ட 20 பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகள் கோரி புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் சில பள்ளிவாசல்கள் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டவை அல்லவெனவும், சிலவற்றுக்கு வங்கிக்கணக்குகள் இல்லை எனவும் புனர்வாழ்வு அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது. பள்ளிவாசல்களின் பதிவுகள் தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீனைத் தொடர்புகொண்டு வினவியபோது, வக்பு சபைக்கு பள்ளிவாசல் பதிவு தொடர்பாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. பதிவுக்காக நிலுவையிலிருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களின் பதிவு கட்டாயமானதாகும். பதிவின்றேல் சட்ட ரீதியான எந்த நகர்வுகளையும் முன்னெடுக்க முடியாது. எனவே, பள்ளிவாசல் நிர்வாகங்கள் பள்ளிவாசல்களின் பதிவு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள் பதிவுக்கான விண்ணப்பங்களை உடனடியாக வக்பு சபைக்கு அனுப்பி வைக்கவேண்டும். பள்ளிவாசல் காணி உறுதி விடயத்தில் சில பள்ளிவாசல்களில் பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதை வக்பு சபை அறியும்.
பதிவுகளுக்கான விண்ணப்பங்களை பள்ளிவாசல் நிர்வாகங்கள் வக்பு சபைக்கு அனுப்பி வைத்தால் அதிலுள்ள குறை நிறைகளை வக்பு சபை நிர்வாகங்களுக்கு தெளிவுபடுத்தும். தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்கும்.
முஸ்லிம்கள் தமது வியாபார ஸ்தலங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்து தமது வர்த்தகங்களை நிறுவன மயப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதே அனர்த்தங்களின்போது நஷ்டஈடுகளை சட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.
-Vidivelli
IF ANY MOSQUE COMMITTEE FAILED TO CONFORM TO THIS BASIC REQUIREMENT IN RUNNING A MOSQUE, SUCH COMMITTEE IS NOT FIT TO BE TRUSTEES OF THE MOSQUE CONCERNED AND MUST BE SACKED AND REPLACED WITH KNOWLEDGEABLE AND EDUCATED MUSLIM TRUSTEES.
ReplyDeleteசட்டம் தன் கடமையைச் செய்யாததினால்தான் இத்துணை அனர்த்தங்களும் நடந்தேறி உள்ளன.
ReplyDeleteஇதற்கு மட்டும் ஏன் சட்டங்கள்?
சட்டத்தை அமுல் நடாத்த முடியாதுபோன அரசின் இயலாமைக்கான மாற்றீடாக விசேட ஏற்பாடாக இந்த நஷ்ட ஏடுகள் 100% ஆக மிக விரைவாக வழங்கப்பட்டாக வேண்டும்.