Header Ads



ஒரு வீரத்தின் கதை (இஸ்லாம் வீரர்களின் மார்க்கம், கோழைகளின் புகழிடமல்ல)



"இதுதான் நான் உன்னுடன் சேர்ந்து உணவு உண்ணும் கடைசி நாளாக இருக்கக்கூடும்! திங்கள்கிழமை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள போகிறேன்! அதில் நான் ஷஹீதாகி விடலாம்!"


வெறும் 15 வயதான அவள் தன் சின்னஞ்சிறு சகோதரியுடன் சேர்ந்து உணவு உண்ட அந்த ஞாயிற்றுக்கிழமை இப்படிக் கூறினாள்.

தாய் தடுத்தும் தனது 12 வயது சகோதரனுடன் இஸ்ரேலுக் கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாள். ஜெரூசலத்தின் அயோக்கிய அமெரிக்க தூதரகத்தை நோக்கி முன்னகர்கிறது பாலஸ்தீன மக்கள் போராட்டம்.

எதிர்பார்த்திருந்த சியோனிச சினைப்பர்கள் தமது வஞ்சம் மிக்க தோட்டாக்களை கக்குகின்றன. அவளும் தன் சகோதரியிடம் கூறிய இலக்கு நோக்கி முன்னேறுகிறாள். 

ஒரு சியோனிச தோட்டா இலக்கு தவறாமல் அவளை தாக்குகிறது. அன்றைய தினம் அவள் எதிர்பார்த்தது போலவே அவள் ஷஹீதாக சிறகடிக்கிறாள்! அவள் பெயர் Wesal al-Sheikh Khalil. 

அன்றைய தினம் ஏறத்தாழ 60 ஷஹீத்கள் நூற்றுக்கணக்கான காயங்களை பாலஸ்தீன புரட்சி வரலாறு பதிந்து கொள்கிறது. இஸ்லாம் வீரர்களின் மார்க்கம் கோழைகளின் புகழிடமல்ல என்ற வரலாற்றிற்கு என்றும் வெற்றிடங்கள் இல்லை! 

அபூஷேக் முஹம்மத்

No comments

Powered by Blogger.