Header Ads



ஜனாதிபதியிடம் இந்தக், கேள்வியை கேட்காதீர்கள்..!


மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன்.

எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏன் திரும்ப திரும்ப கேட்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. He should contest in the next presidential election and see how many people dislike him.

    ReplyDelete
  2. ஹ்ம்ம் இவருக்கு தெரியும் இனி போட்டியிட்டால் மண் கவ்வ வேண்டிவரும் என்று. எதோ UNP யின் புண்ணியத்தில் இவர் மேடை ஏறினார். என்ன செய்ய இலங்கையின் தலைவிதி இப்படி போகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.