Header Ads



"மகிந்த ராஜபக்ஷ இனவாதிகளிடத்தில், கைதியாவதற்கு முன் அவரை மீட்டெடுக்க வேண்டும்"

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனவாதிகளிடத்தில் கைதியாவதற்கு முன்னதாக அவரை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைப்பதே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகில ரணில் எதிர்ப்பு குழுவின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் இணைப்பதே ரணில் எதிர்ப்பு குழுவில் அடுத்த கட்ட விரைவு நடவடிக்கையாகும்.

இதன் முதற்கட்டமாக பௌத்த பீடங்களின் தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம்.

விரைவில் மகிந்த ராஜபக்ஷவை சந்திந்து கலந்துரையாடவுள்ளோம், அதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் சந்திக்கவுள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எம் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு அன்றைய தினம் சிறந்த பதிலினை வழங்கவுள்ளோம்.

அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைத்து நல்லாட்சி ஒன்றை மலரச்செய்வோம் என டிலான் பெரேரா தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.