Header Ads



சகோதரரின் உத்தரவு கிடைத்தால், ஜனாதிபதி தேர்தலில் போட்டி - கோத்தபாய

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தீர்மானம் மேற்கொண்டால் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலை முன்னோக்கி கொண்டு சென்றவர் மஹிந்த ராஜபக்ச தான். எனவே அவர் தான் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பு மாற்றம் காரணமாக மஹிந்தவினால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென்பதனால் அவரால் தெரிவு செய்யப்படும் நபரே மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

அவரே விரும்பி என்னை பிரதிநிதியாக நியமித்தால் தேர்தலில் போட்டியிட தயார் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுடன் இடம்பெற்ற செவ்வியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கோத்தபாய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.