Header Ads



இந்த அரசாங்கத்தை தவிர, இந்நாட்டுக்கு வேறு மாற்று வழியில்லை - ரணில்

அரசாங்கத்தின் மீது குறை கூறியவர்கள் மாற்று யோசனைகளை முன்வைக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25வது நினைவஞ்சலி நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்களுடன் எமக்கு முன்னோக்கி செல்ல  வேண்டியுள்ளது. இந்த அரசாங்கத்தை தவிர இந்த நாட்டுக்கு வேறு மாற்றுவழியில்லை. எம்மீது குற்றஞ்சுமத்துவதற்கு பலர் இருக்கின்றனர். தினமும் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்கப்படுகின்றோம். எனினும் இதுவரை அதற்கு மாற்றுவழி முன்வைக்கப்படவில்லை. அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்று அறிவிக்கவில்லை.

எம்மிடம் குறைபாடுகள் உள்ளன. அரசாங்கத்தின் வேகம் போதாது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என மக்கள் பெப்ரவரி மாதம் தகவல் ஒன்றை வழங்கினார்கள். அதனால் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்

1 comment:

  1. As first arrest all robbers who you all published as robbers and claim all properties from them and give to the public.First do this and 2nd step i will tell you.

    ReplyDelete

Powered by Blogger.