Header Ads



புத்தளம் வெள்ளத்தில் மூழ்கிறது - ரயில் சேவை இடைநிறுத்தம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் இந்நிலை மேலும் வலுவடையக்கூடுமென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று (24) காலை 8.30 மணியுடன் முடிவ​டைந்த 24 மணிநேரத்துடன் புத்தளம் – மெல்லவ பிரதேசத்தில் 122.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லுவ, ஆரச்சிக்கட்டுவ ஆகிய பிரதேசங்கள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், அத்துடன் ​​​ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக, புத்தளம் மார்க்க ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.