Header Ads



மனோ கணேசனுக்கு, சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருவீர்களா? நான் ரெடி நீங்கள் ரெடியா? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், அமைச்சர் மனோ கணேசனிற்கு சவால் விடுத்துள்ளார்.

உங்களைப்பற்றி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை, நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு அரசியல் கோமாளி என அமைச்சர் மனோ கணேசன் கூறிய கருத்து தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியல் நாகரீகம் தெரியாமல் அமைச்சர் மனோ கணேசன் பேசுவாராக இருந்தால், எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்?

மனோ கணேசன் அவர்களே தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்தும் பொறுமை காக்க மாட்டேன்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டீர்கள், ஏணிகளாக இருந்து உங்களை ஏற்றிவிட்ட பிரபாகணேசன், வேலணை வேணியன் எங்கே?

என் கருத்திற்கு எதிர்க்கருத்து கூறுவது என்றால், அரசியல் நாகரிகத்தை பேணி பேசுங்கள். இல்லை என்றால் நானும் உங்கள் கடந்த காலத்தை தூசு தட்டுவேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அரசியல் நாகரீகம். அந்த நாகரீகத்தை அறியாத அமைச்சர் மனோ கணேசன் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி என்னை விமர்சித்துள்ளார்.

4 comments:

  1. பசும் தோல் போற்றிய புலி தான் மாங்காய் கணேசன்

    ReplyDelete
  2. சிவாஜி சார், இப்படி உப்பு-சப்பில்லாமல் statement விடுத்தும் அநாகரியம் தான்.

    ReplyDelete
  3. கொஞ்ச நாளாய் மனோவுக்கு விசர் பிடிச்சிக் கிடக்கு, ஒரு மனோ தத்துவ டொக்டர் கிட்ட மனோவைக் கொண்டுபோயிக் காட்டவேணும்

    ReplyDelete
  4. Maithri should take back minister portfolio from racist Mano ganeson and give it to some other Tamil or Sinhalese.

    ReplyDelete

Powered by Blogger.