Header Ads



அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான, நாளொன்றைக் குறித்துக் கொள்ளுங்கள் - ஜனாதிபதி

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நாளொன்றைக் குறித்துக் கொள்ளுமாறு, தேசிய அரசாங்கத்தில் நிலைத்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேருக்கும், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியதாக, தயாசிறி ஜயசேகர எம்.பி கூறினார்.

புதிய கட்சி மறுசீரமைப்பின் கீழ், எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதியன்று, புதிய நிர்வாகச் சபையொன்று நியமிக்கப்பட உள்ளதாகவும், தயாசிறி குறிப்பிட்டார்.

சுதந்திர ஊடக மையத்தில், ​இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.