Header Ads



தெஹிவளையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலா...?

தெஹிவளையின் சில இடங்களில் அச்சுறுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

26 ஆம் திகதியை மையப்படுத்தி (தெஹிவளையை சுற்றிவளைப்போமா..?) என சிங்கள மொழியில், 2 சிங்க சின்னங்களுடன்ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி தொடர்பில் ஆசாத் சாலி பொலிசாரின் உடனடிக் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

அத்துடன் இதுதொடர்பில் தாம் நாளை செவ்வாய்கிழமை மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

குறித்த சுவரொட்டிகள் இனவாத நோக்கம் கொண்டதா அல்லது விளம்பர நோக்கம் கொண்டவையா இல்லையேல் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதா என்பது பற்றி உறுதிப்படுத்தப்படாத போதும் தாம் இதுகுறித்து விழிப்புடன் இருப்பதாக ஆசாத் சாலி தெரிவித்தார்.

1 comment:

  1. ஓஒ ஓடிபோய் சொல்லுங்கோ உடனடியா தீர்வு தருவார். போதா குறைக்கு அந்த மதகுருவையும் கூட்டிக்க சொல்லுவார் .

    ReplyDelete

Powered by Blogger.