Header Ads



புத்தளத்தில் எரியுண்ட நிலையில், சடலம் மீட்பு

-Dc-

புத்தளம், உடப்பு கீரியன்கல்லிய பகுதியில் பாழடைந்த காணிக்குள் இருந்து எரியுண்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

உடப்பு பகுதியை சேர்ந்த 34 வயதான பெரியவெள்ளையன் அருள்முருகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் உடப்பு நகரில் உந்துருளி உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சடலம் எரியுண்ட நிலையில் கீரியன்கல்லிய பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.

சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ள பணப் பையில் கடிதம் ஒன்று கிடைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் கடன் தொல்லை காரணமாக தான் மன உளைச்சலில் இருந்ததாக எழுதப்பட்டிருந்தது. அவரின் வீட்டில் இருந்தும் இதே போன்ற ஒரு கடிதத்தையும் பொலிஸ் மீட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.