பாதாள உலக குழுவை கைது செய்யாமைக்கு சட்டஒழுங்கு அமைச்சும், காவற்துறை திணைக்களமுமே பொறுப்பு
பாதாள உலக குழு குற்றவாளிகளை கைது செய்யமுடியாமைக்கான பொறுப்புக்களை சட்ட ஒழுங்குகள் அமைச்சு மற்றும் காவற்துறை திணைக்களம் என்பனவே ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தின் இன்று -31- இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாம், காவற்துறை மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
அதற்கான பொறுப்புக்களை ஏற்கும், சட்ட, ஒழுங்குகள் அமைச்சு மற்றும் காவற்துறை திணைக்களம், அதில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் இருக்குமாயின் அது குறித்து தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு பெரும் நாட்டுக்கு கிடைத்த அரும்பெரிய பெரிய பொக்கிஷங்கள்!
ReplyDelete