Header Ads



நட்டம் ஏற்பட்டபோதும், தானம் வழங்கிய விவசாயி - கலேவலையில் சம்பவம் (படங்கள்)


-JM.Hafeez-

சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்த பல இலட்சம் ரூபா பெறுமதியான வட்டக்காய்களை போதியளவு விலைக்கு விற்க முடியாத ஒரு இளம் விவசாயி, வெசாக் தினம் அதனை தானமாக (தன்சல) மக்களுக்கு வழங்கிய சம்பவம் ஒன்று (30.4.2018) இடம் பெற்றுள்ளது.

மேற்படி நிலை கலேவலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ரீ.ஐP. ஜயவீர என்ற விவசாயி ஒருவருக்கே ஏற்பட்டுள்ளது. சுமார் ஐந்து இலட்ச ருபாவிற்கு மேல் செலவு செய்து மேற்கொண்ட விவசாயத்தில் போதியளவு இலாப மீட்ட முடியாத நிலையில் தனது பெற்றோர்கள் சார்பாக அவர்களுக்கு புன்னியம் கிடைக்க வேண்டும் என்று இதனை 'தன்சல' ஊடாக தர்மம் செய்ய முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். 

கலேவலை, கலாவௌ பிரதான பாதையில் மக்குலுகஸ்வௌ சந்தியில் இடம் பெற்ற இந்த தான சாலையில் பஸ்வண்டிகள் மற்றும் வாகனங்களில் வெளியிடங்களில் இருந்து பயணித்தோர் மேற்படி வட்டக்காய்களைப் பெற்றுச் சென்றனர். 



No comments

Powered by Blogger.