Header Ads



8 மாத குழந்தையை, 8 பேர் கொண்ட குழு கடத்தியது

வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த எட்டுப்பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 மாதங்களேயான குழந்தையை கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் வந்தவர்களே குழந்தையை கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர் என, பெற்றோர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசுதரன் வானிஷன் என்றக் குழந்தையையே, இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்றுள்ளனர் என்றும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

1 comment:

  1. The HUMAN(?) on earth are Highly corrupted to an extend to

    1. kidnap this 8 months infant, who knows nothing about the world yet
    2. gang raping Asiba the small girl by temple in-charge man and others
    3. gang raping and burning young girls after Asiba incident another

    The is already there for Animals to advice their species as " DO NOT BEHAVE LIKE HUMAN", I hope.

    Ya Allah Protect Good People from Satan and its friends.

    ReplyDelete

Powered by Blogger.