பிறந்தநாள் கொண்டாடிய 61 பேர் கைது
சட்டவிரோதமான போதைப்பொருட்களை பாவித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 53 இளைஞர்களையும் 8 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெயங்கொடை நகரில் நேற்று (26) காலை குடிபோதையில் விபத்துக்குள்ளான மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
குறித்த நபரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வெயங்கொடை நகரில் உள்ள விடுதியொன்றில் சட்டவிரோதமான போதைப்பொருட்களை பாவித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 53 இளைஞர்களையும் 8 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நண்பருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இவ்வாறு போதைப்பொருள் பாவித்ததாக குறித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெயங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment