Header Ads



53 இலங்கையர்களை திருப்பியனுப்பியது லெபனான்

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கைப் பெண்கள் 53 பேர், அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தனர்.

வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற லெபனான் சென்றிருந்த இவர்கள் முறையான விசா இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்பு காலத்தை உபயோகப்படுத்தி, ​லெபனானுக்காக இலங்கை தூதுவர் எடுத்த முயற்சியால் இவர்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.