ஜனாதிபதி நியமித்த 4 பேரை, ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தல்
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளம் தொழில் முனைவோர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த டிலான் பெரேரா, எஸ்.பி. திஸாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால ஆகியோரை ஜனாதிபதி தேசிய பட்டில் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தார்.
தனது நிலைப்பாட்டுக்கு அமைய செயற்பாடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி அவர்களை நியமித்தார்.
ஜனாதிபதியின் நிலைப்பாட்டுடன் இருக்க முடியாவிட்டால், ஜனாதிபதி வழங்கிய பதவியை அவரிடம் மீண்டும் கையளிக்க வேண்டும்.
இதன் பின்னர் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் நபர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகிய போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து முன்னுதாரணத்தை பெற்றுக்கொடுத்தார் எனவும் ரஜிக கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment