Header Ads



இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு


2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

ஒப்பந்த வீரர்கள் 33 பேரை தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடும் அனைத்து வீரர்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒப்பந்த வீரர்கள் A, B, C, D மற்றும் பிரீமியர் என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.