Header Ads



சல்­மாவைப் பெற்­றெ­டுத்த 21 மணி­நே­ரத்தில், பட்­ட­ம­ளிப்பில் கலந்­து­கொண்ட ஸெய்னப்


தனது இரண்­டா­வது பெண் குழந்­தையைப் பிர­ச­வித்­தி­ருந்த 26 வயது ஸெய்னப் அப்­துல்லாஹ் என்ற அமெ­ரிக்­காவின் மின்­னஸ் ­பொலிஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த இளம் தாயொ­ருவர் 21 மணி­நே­ரத்தில் பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்­து­கொண்­டுள்ளார்.

இரவு 8.00மணிக்கு தனது இரண்­டா­வது பெண் குழந்­தை­யான சல்­மாவைப் பெற்­றெ­டுத்த அவர் மறுநாள் மாலை விசேட கல்­வித்­து­றையில் முது­மானி டிப்­ளோமா பட்­டத்­தினை பெற்­றுக்­கொண்டார்.

எனது குடும்­பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்­டத்தை எட்­டிய முத­லா­வது அங்­கத்­தவர் நான் என்­பதால் தனக்கு பட்­டத்­தினை பெற்­றுக்­கொள்­வது முக்­கி­ய­மாக இருந்­தது என ஸெய்னப் அப்­துல்லாஹ் தெரி­வித்தார்.

சென் தோமஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரண்டு வரு­டங்கள் தனது பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்தார்.  2006 ஆம் ஆண்டு சிரி­யா­வி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து அமெ­ரிக்­காவில் குடி­யே­றிய அவர் தற்­போது தனது சொந்த பகல்­நேர பரா­ம­ரிப்பு நிலை­யத்­தினை நடத்தி வரு­கின்றார். இந்த இலக்கை அடை­வ­தற்­காக இரவு நேரத்­தி­லேயே தான் பாடங்­களைப் படித்­த­தாக ஸெய்னப் தெரி­வித்தார்.

குழந்­தையைப் பிர­ச­வித்த மறு­நாளே பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்து கொள்­வது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான செயல் என தான் கரு­தி­ய­போ­திலும் ஸெய்ன­பிற்கு பட்­டத்­தினை நேர­டி­யாகப் பெற்­றுக்­கொள்­வ­தி­லேயே ஆர்வம் இருந்­தது என ஸெய்னபின் தாயார் 50 வய­தான அனாப் யுகுப் தெரி­வித்தார்.

பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்­து­கொள்ளும் தனது திட்­டத்தைத் தெரி­வித்­ததும் தனது நண்­பிகள், குடும்­பத்­தினர் மற்றும் வைத்­தி­யர்கள் கூட அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக ஸெய்னப் தெரி­வித்தார்.

 இந் நிகழ்வில் நான் நேர­டி­யாகக் கலந்­து­கொள்ள வேண்டும் என விரும்­பி­ய­தற்­கான காரணம் எனது குடும்­பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்­டத்தை எட்­டிய முத­லா­வது அங்­கத்­தவர் நான் என்­ப­த­னா­லாகும். அதுதான் நான் செல்ல வேண்டும் என தீர்­மா­னித்­த­தற்­கான காரணம் என அவர் தெரி­வித்தார்.

என்னை நானே பாராட்டிக் கொள்ள விரும்­பினேன், ஏனென்றால், இந்த இலக்கை அடை­வ­தற்கு கடு­மை­யாக உழைத்­துள்ளேன். உரிய நேரத்தில் எனது ஒப்­ப­டை­களைக் கைய­ளிக்க வேண்டும் என்­ப­தற்­காக நள்­ளி­ரவு தாண்­டியும் அந்த வேலை­களைச் செய்­துள்ளேன். இரவு நேரக் குளி­ரிலும் கல்­லூ­ரி­யி­லிருந்து பய­ணித்­தி­ருக்­கிறேன். அதற்­காக என்னை நானே பாராட்­டிக்­கொள்ள விரும்­பினேன்.

எனது வகுப்பு நண்­பர்கள் விழாவில் என்­னுடன் கலந்­து­கொண்ட எனது மகள் சல்­மாவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். எனது மகளைப் பார்த்த எனது வகுப்புத் தோழர்கள் குழந்தை அழ­காக இருப்ப­தாகக் கூறி­ய­தோடு எனது சாய­லிலே சல்மா இருப்­ப­தா­கவும் தெரி­வித்­த­தாக மகிழ்ச்சி பொங்க தெரி­வித்தார் ஸெய்னப்.

என்னை நினைத்தும், எனது அடைவு குறித்தும் நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன், சென் தோமஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆத­ர­வின்றி என்னால் இதனைச் செய்­தி­ருக்க முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

தனது மக­ளுடன் நேரத்தைச் செல­விட சில மாதங்கள் ஓய்­வெ­டுத்­துக்­கொள்ள உத்­தே­சித்­துள்ள ஸெய்னப் தனது கலா­நிதிப் பட்­டத்­திற்­கான கற்­கை­நெ­யினை தொடரத் திட்­ட­மிட்­டுள்ளார்.
-Vidivelli

No comments

Powered by Blogger.