Header Ads



"2020 ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்ய திட்டமிட்டுள்ளோம்"


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல குழுக்களும் ஒன்றுபடும் நாள் வெகு தூரத்தில் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தற்காலிக விடுகளுக்குச் சென்றவர்கள் தனது தாய் வீட்டுக்கு திரும்பி வரும் நாள் மிக தொலைவில் இல்லை.எதிர்வரும் 2020  ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்கு தமக்கு திட்டமொன்று உள்ளதாகவும்  அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

Dc

1 comment:

  1. Still dreaming after the local Govt. Election......

    ReplyDelete

Powered by Blogger.