சோமாலியாவில் நிர்க்கதியான 12 இலங்கையர்கள், நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்
சோமாலியாவில் நிர்க்கதியாகியிருந்த 12 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சு, சர்வதேச குடியேறிகளுக்கான அலுவலகத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.
அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த நடவடிக்கைகளை ஒரு முகப்படுத்தியது.
தொழில் பிணக்கு காரணமாக இந்த இலங்கையர்கள் நேற்று நாட்டுக்கு மீளத்திரும்பினர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சோமாலியாவில் பணியாற்றிவரும் இந்த இலங்கையர்களுக்கு உரிய வேதனம் மற்றும் ஆலோசனை சேவைகள் எவையும் வழங்கப்படவில்லைஎன்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Post a Comment