Header Ads



பதவியும், பணமும் வழங்கி பிரச்சினையை மூடிமறைக்க முயற்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் ரணில் விக்ரமசிங்க விலகும் வரையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை வாபஸ் பெறப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உள்ளதாகவும் தெரிவித்த அவர், கட்சிக்குள் மாற்றம் வரும் வரையில் எமது கருத்தில் உறுதியாக இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றம் கொண்டுவருமாறு கூறினால், பதவியும், பணமும் வழங்கி பிரச்சினையை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் ரங்கே பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

1 comment:

  1. Also there are useless fellows in the UNP party must be kicked them out Malik Samarawickrama and Sagararatnayake.

    ReplyDelete

Powered by Blogger.