உச்சக்கட்ட பரபரப்பில், பிரதமர் விவகாரம்
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கோரிக்கையை, சுதந்திரக் கட்சிக்கு தலைமைதாங்கிய, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவே முன்வைத்துள்ளார்.
அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாமென ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றுமொரு சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
Post a Comment