Header Ads



சகல அமைச்சுக்களையும் நேரடி, கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மைத்திரி - ரணிலும் சம்மதம்

அனைத்து அமைச்சுக்களையும் தன்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்ற கையோடு இந்த தீர்மானம் அமுலாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

பிரதமருடன் அமைச்சரவை மாற்றம் குறித்தான கலந்துரையாடல்களின் போது தனது இந்த தீர்மானத்தை ஜனாதிபதி நேரடியாகவே தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அனைத்து அமைச்சுகளின் செயற்பாடுகளையும் கண்காணிக்கும் வியூகம் ஒன்றை அமைப்பதுடன், அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிடவும் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனாதிபதியின் இந்த உத்தேசத்திற்கு பிரதமர் முழு இணக்கப்பாட்டை வெளியிட்டிருப்பதாக மேலும் தெரியவருகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.