Header Ads



நான் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியடைந்திருப்பேன் - சஜித்

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்தது கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனவும் தனக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டாலும் அந்த பதவிக்கு தான் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியடைந்திருப்பேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்சியின் புதிய நிர்வாகிகள், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அது கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் யோசனை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பில் எனது பதவி தீர்மானிக்கப்பட்டிருக்குமாயின் சிறந்ததாக இருந்திருக்கும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.