Header Ads



அரசின் வாக்குறுதி காற்றில் பறந்தது, வன்முறைக்குள்ளான முஸ்­லிம்கள் கவலை


கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வீடுகள் மற்றும் கடைகள் சிங்­கள – தமிழ் புத்­தாண்­டுக்கு  முன்பு புனர்­நிர்­மா­ணிக்­கப்­படும் என அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் இது­வரை எந்­தவொரு பள்­ளி­வா­சலோ, வீடோ, கடையோ புன­ர­மைக்­கப்­ப­ட­வில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்டி  மாவட்­டக்­கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

 அத்துடன் மே மாதம் நடுப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களும், வீடு­களும் கடை­களும் நோன்­புக்கு  முன்பு புன­ர­மைக்­கப்­ப­ட­வேண்டும் என புனர்­வாழ்வு, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

வன்­செ­யல்­க­ளினால் கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் 289 வீடுகள், 17 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 217 கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 3 பள்­ளி­வா­சல்கள் முற்­றாக எரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வன்­செ­யல்கள் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் வீடு­க­ளையும் தங்கள் பொரு­ளா­தா­ரத்­தையும் இழந்­துள்­ளனர் என உலமா சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்கள் தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள அசௌ­க­ரி­யங்கள் தொடர்­பாக உலமா சபை கண்டி மாவட்­டக்­கிளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மிடம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. உலமா சபையின் கண்டி மாவட்­டக்­கிளை காரி­யா­ல­யத்தில் அமைச்சர் ஹலீ­முக்கும், உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

கண்டி வன்­மு­றைகள் குறித்த மதிப்­பீட்டு நட­வ­டிக்­கைளை அமைச்சர் ஹலீம் நேரில் சென்று பார்­வை­யி­டும்­போது...

இது தொடர்பில் அகில இலங்கை உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளைத் தலைவர் மௌலவி எச்.உமர்தீன் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்­து­தெ­ரி­விக்­கையில், "அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­த­படி சேதங்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்கள் வீடுகள், கடைகள் திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது கண்டிப் பகு­தியில் தொட­ராக மழை­பெய்து வரு­வதால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். வீடுகள்  சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டதால் பலர் உற­வினர் வீடு­களில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். மேலும் சிலர் இரு மாத­கா­லத்­துக்கே வாடகை வீடு­களைப் பெற்­றுள்­ளனர். தற்­போது வன்­செயல் இடம்­பெற்று இரு­மா­த­காலம் அண்­மிக்கப் போகி­றது.

பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வீடுகள், கடை­களை ஏப்ரல் 29 ஆம் திக­திக்கு முன்பு புன­ர­மைத்துத் தரு­வ­தாக இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் அதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. உல­மா­சபை இது­தொ­டர்­பாக அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், லக் ஷ்மன் கிரி­யெல்ல ஆகிய இரு­வ­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது.

நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­வதும் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் நோன்பு ஆரம்­ப­மா­க­வுள்­ளதால் நோன்­புக்கு முன்பு  பாதிக்­கப்­பட்ட அனைத்து வீடு­களும், பள்­ளி­வா­சல்­களும் கடைகளும்  புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதன் பிறகும் பொறுமை காக்கமுடியாது. நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போகிறோம் என்கிறார்கள். நாம் அவர்களை பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம்.

எனவே நோன்புக்கு முன்பு புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்" என்றார்.

-Vidivelli ARA.Fareel

2 comments:

  1. Please don't blame our Ranil government. Unp is muslim's party

    ReplyDelete
  2. யாழ்ப்பாணம்,அழுத்கம,ஹிந்தோட்ட,அம்பாறை,(கண்டி 1915) எல்லா இனவாதச்செயலால்
    பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்ட ஈடு கொடுத்து முடிந்துதானே.
    திகன மட்டும்ம்தான் பாக்கி அதையும் கொடுத்துவிடுவார்கள் போடாங்கோய்யால.
    இன்னும் இந்த அரசாங்கத்தை நம்பி நம்பி குடுங்கள் வாக்க்கை.

    ReplyDelete

Powered by Blogger.