Header Ads



இந்திய தூதரக அதிகாரி யாழ்ப்பாணம், ஜூம்மா பள்ளிவாசலிற்கு விஜயம்


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி  எஸ் பாலச்சந்திரன் யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலிற்கு நேற்று(26) விஜயம் செய்துள்ளார்.

இதன் போது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அவரை வரவேற்றதுடன், எம் எஸ் முஹம்மத் மௌலவியிடம்  அதிகாரி  எஸ் பாலச்சந்திரன்  ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

இந்ந நிகழ்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர்களான கே.எம் நிலாம் எம்.எம் நிபாஹீர் முன்னாள் மாநகர உறுப்பினரான சரபுல் அனாம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.




No comments

Powered by Blogger.