Header Ads



மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா

-பாறுக் ஷிஹான்- 

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர் என அறிய முடிகிறது. மாவட்ட நீதிபதிகள் திருமதி சிறிநிதி நந்தசேகரன், என்.எம்.எம் அப்துல்லா மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் ஆகிய மூவர் வடக்கு – கிழக்கிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 பேரிலிருந்து 110 பேராக அதிகரிக்க நாடாளுமன்று அனுமதித்திருந்தது. இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா 

திருகோணமலை மாவட்ட நீதிபதியான என்.எம்.எம் அப்துல்லா, இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளவர். வடக்கு – கிழக்கில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் அவர் கடமையாற்றினார்.

5 comments:

Powered by Blogger.