Header Ads



கொழும்பில் அடுக்கு மாடிகள், பாரிய ஆபத்தில்


கொழும்பு - 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளமையினால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டுத் தொகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக அனுப்புமாறு மின்சக்தி எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கட்டடத்தின் ஆபத்தான நிலைமை மற்றும் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை தொடர்பில் நேற்று காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

“2012ஆம் ஆண்டு கட்டட ஆய்வு நிலையத்தினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கமைய இந்த கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளதாக கூறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்த நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்களுக்கு விரைவில் இந்த ஆபத்து தொடர்பில் அறிவித்து இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன்.

அவர்களுக்கு தற்காலிக இடங்கள் வழங்குவதற்கு அவசியமான கொள்கைள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்குவதற்கு அமைச்சரவை பத்தரம் ஒன்று சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த குடியிருப்பு மக்களை ஆபத்தில் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.