Header Ads



டியூசன் வகுப்பில் மாணவன் மீது ஆசிரியை, கண்மூடித்தனமான தாக்குதல்


வவுனியா, குடியிருப்பு பகுதியில் வீட்டிலேயே தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வரும் பிரபல பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை ஒருவரிடம் கல்வி பயிலும் 9 வயதுடைய தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கல்வி நிலையத்திற்கு சமுகம் தராதமையையடுத்து மாணவனை ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியை தாக்கியதில் மாணவனின் மூக்கிலும் ,காதிலும் இரத்த கசிவு ஏற்பட்டதுடன் மாணவனின் கன்னம் கண்டல் காயத்துக்குள்ளாகி மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த காலங்களிலும் மாணவர்களை கடுமையாக தாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் பெற்றோர் மத்தியில் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Corporal punishment should be completely banned from the schools and mandatory jail sentence should be given to teachers committing such crimes.

    ReplyDelete

Powered by Blogger.