Header Ads



ரணில் தோல்வியடைந்தாலும், பாராளுமன்றம் கலைக்கப்படாது

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ராகக் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­தமர் தோல்­வி­யுற்­றாலும் பாரா­ளு­மன்றம் கலை­யாது என்றும் அர­சி­ய­ல­மைப்­பின்­படி ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில்  அதிக பெரும்­பான்­மை­யுள்ள கட்சித் தலை­வ­ரையே அர­சாங்­கத்தை அமைக்­கும்­படி அழைப்பு விடுப்பார் எனவும் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன தெரி­வித்தார்.

   நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­தமர் தோல்­வி­யுற்றால்  அடுத்து என்ன நடை­பெ­று­மென்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் இது குறித்து மேலும்  கருத்து தெரி­விக்கும் போது, அர­சி­ய­ல­மைப்­பின்­படி அர­சாங்கம்  பத­விக்கு வந்து நான்­கரை ஆண்­டுகள் ஆகும் வரை  ஜனா­தி­ப­தியால் கூட அர­சாங்­கத்தைக் கலைக்க முடி­யா­தென்றும் தெரி­வித்தார். 

அவ்­வாறு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டுமானால்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்  வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.