ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து விசேட பேச்சு - ரணில்
லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அவரை சந்தித்து விசேட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
“தலதா மாளிகைக்கு வந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டேன். அதேபோன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்று கலந்துரையாடலையும் நடத்தினேன்.
சில வேவைத்திட்டங்களை நிறைவு செய்யப்படவுள்ளதோடு மேலும் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் புதிய திட்டத்தின் ஊடாக முன் செல்ல எதிர்பார்க்கின்றோம். கடந்த வருடத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தோம். எனினும் மக்களுக்கு தொடர்ந்தும் நன்மைகளை செய்வோம்” என குறிப்பிட்டார்.
Post a Comment