மஹிந்தானந்த எம்.பி கைது
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று காலை பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் கெரம் போர்டுகளை கொள்வனவு செய்து, 39 மில்லியன் நிதியை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Number One culprit and 600 million worth asset.
ReplyDelete