இம்ரான் மஹ்ருப், ஆளுமையுள்ள அரசியல்வாதி என்றால்...?
திருகோணமலையில் அபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பின்னணியை ஆராயும் படி பிரதி பொலிஸ் மா அதிபர் கட்டளையிட்டுள்ளாராம். அதுவும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டுக்கொண்டபின்தான் இந்த உத்தரவாம்.
நடந்ததெல்லாம் நடந்து முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றமும் பெற்றுக்கொடுத்த பின்னர் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியை கண்டறியும் படி இம்ரான் மஹ்ரூப் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே கண்டி கலவரத்தின் பின்னணியை இவர் அங்கத்தவராக உள்ள ரணில் அரசு அன்டாட்டிகாவில் தேடிக்கொண்டிருக்கிறது.
உண்மையில் இம்ரான் மஹ்ருப் ஆளுமையுள்ள அரச கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினராயின் மேற்படி முஸ்லிம் ஆசிரியைகளின் தற்காலிக இடமாற்றத்தை ரத்து செய்து நீதி கிடைக்கும் வரை அபாயா அணிய அனுமதி பெற்று தந்திருக்க வேண்டும்.
கல்வி அமைச்சர் இவர்களின் ஐ தே க அமைச்சர். பிரதமர் இவர்களின் தலைவர். திருகோணமலையில் ஐ தே க வின் நேரடி முஸ்லிம் உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மட்டும்தான். தமிழர்களுக்கு கூட அங்கு ஐ தே க மூலம் எம். பி இல்லை.
இந்த நிலையில் மேற்படி முஸ்லிம் பெண்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை ஐ தே க அரசின் முஸ்லிம் விரோத போக்கை காட்டுகிறது. இந்த அநியாயத்தை தடுக்க முடியாத இம்ரான் மஹ்ரூப் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியை கண்டு பிடிக்க சொல்வது கோழிக்கள்ளனை விட்டு விட்டு கூரையில் எப்படி ஓட்டை வந்தது என்பதை ஆராய்வதாகும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
உலமா கட்சி
Whoever we want justice for our sisters and mothers to Weare whatever they want, no compromise on this matter.
ReplyDeleteIndha Mubarak always talking like this....politicly aasaulting all other politicians...Awar apudi iwar ipudi endu mathwangala pathi pesama just show yhe actions
ReplyDelete