Header Ads



சுதந்திர கட்சியின் மேதினக் கூட்டத்தை, பகிஸ்கரிக்கப் போவதாக அறிவிப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக, அண்மையில் அரசாங்கத்தை விட்டுவிலகிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின் சில முக்கிய பதவிகளை வகித்து வருவோரின் பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி இந்த மாற்றத்தை செய்யத் தவறினால் நிச்சயமாக சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். மேலும், தனியான மே தினக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு நேரிடும் என தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் கட்சியில் தொடர்ந்தும் நீடித்தால் கட்சிக்கு எதிர்காலமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.