இராணுவ புலனாய்வு அதிகாரி றியாஸ், நீரில் மூழ்கி மரணம்
இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று -22- பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். றியாஸ் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், நீரோடை ஒன்றில் பொழுது போக்காக மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Post a Comment