Header Ads



உரிய மாற்றம் இன்றேல், ஐ.தே.க.யில் மீண்டும் போராட்டம்

ஐ. தே. கட்சிக்குள் உரியவாறான மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் எனவும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் எந்த சந்தர்ப்பத்திலும்  தீர்மானம் எடுக்கப் பின்நிற்கப் போவதில்லையெனவும்  இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளைத் தீர்ப்பதற்கு தாமும் தமது குழுவினரும் தேவையான ஆலோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் இம்முறை ஐ. தே. கட்சிக்குள் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஸ்திரமானதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.