Header Ads



ஐ.தே.க. தனி அரசாங்கம் அமைப்பதை தவிர்க்கவே, நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலையாக செயற்பட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கம் அமைப்பதை தவிர்க்கவே நாம் நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலையாக செயற்பட்டோம். 

தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஆட்சியினை சரியான திசையில் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

16 உறுப்பினர்களுக்கு எதிராக ஐ.தே.க. கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ன செய்யவுள்ளது என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.