Header Ads



ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, 'பிரதமர் பதவியை நிராகரித்தேன்' - ராஜித

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில், தன்னை பிரதமர் பதவில் அமர்த்துவது தொடர்பில் வந்த முன்மொழிவினை தான் நிராகரித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை  2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிபீடமேற்றுவதற்காக செயற்படுவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.